கொடைக்கானல்-பழநி மலைச்சாலையில் 25 நாட்களுக்குப் பிறகு பஸ் போக்குவரத்து தொடக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானல்-பழநி மலைச் சாலையில் 25 நாட்களுக்குப் பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் கடந்த மாதம் மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு சவரிக்காடு அருகே சாலை துண்டிக்கப்பட்டது. பின்னர் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதை அடுத்து சிறு ரக வாகனங்கள் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடையாக இருந்த பாறை வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதையடுத்து 25 தினங்களுக்குப் பிறகு நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்….

The post கொடைக்கானல்-பழநி மலைச்சாலையில் 25 நாட்களுக்குப் பிறகு பஸ் போக்குவரத்து தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: