கும்மிடி. எளாவூர் சோதனைசாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய பெண் கைது; 15 கிலோ பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைசாவடியில் சிப்காட் போலீசார் நேற்று மாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சை மடக்கி, பயணிகளிடம் சோதனை நடத்தினர். இதில், ஆந்திராவை சேர்ந்த கீதா (55) என்பவர் 15 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீதாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார் உள்ளனர் என போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்….

The post கும்மிடி. எளாவூர் சோதனைசாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய பெண் கைது; 15 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: