திண்டுக்கல்- பழநி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி இடையே புதிய மின் பாதையில் சோதனை ரயில் ஓட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல் – பழநி இடையே 58 கிமீ தூரம் உள்ள ரயில்வே பாதை மின் மயமாக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் முடிந்த நிலையில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் இணைப்பு செலுத்தி, மின்சார ரயில் இன்ஜின் மற்றும் பயணிகள் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இந்த சோதனை ரயில் ஓட்டத்தில் தலைமை மின்சார பொறியாளர் சித்தார்த் கலந்து கொண்டு ஆய்வு செய்தார். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதிய மின் பாதையில் சோதனை ரயில் ஓட்ட ஆய்வு நடந்தது. இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் விரைவில் இயக்கப்பட உள்ளதாக ஆய்விற்கு பின்னர் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post திண்டுக்கல்- பழநி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: