மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட வாலிபர்: ரயிலில் நடந்த ‘பகீர்’ சம்பவம்

சென்னை: தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’, தெலுங்கில் பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார், மாளவிகா மோகனன் (31).கேரளாவை சேர்ந்த அவருடைய தந்தை ஒளிப்பதிவாளர் மோகனன் பாலிவுட் படங்களில் பணியாற்றி வந்ததால், மாளவிகா மோகனின் பள்ளி மற்றும் கல்லூரி காலம் மும்பையிலேயே கழிந்தது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், மும்பையில் நடந்த ‘பகீர்’ சம்பவத்தை பற்றி பேசியுள்ளார்.

இது இணையதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அவரது பேட்டி: ஒருநாள் எனது தோழிகளுடன் கல்லூரியில் இருந்து மின்சார ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு 7 மணியாகி விட்டதால், அது பர்ஸ்ட் கிளாஸ் என்பதால், அந்த கம்பார்ட்மெண்டில் 3 பேரை தவிர யாருமே இல்லை. அதனால், ஜன்னல் கம்பியில் முகத்தை வைத்தபடி நான் வெளியே வேடிக்கை பார்த்து வந்தேன். ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றபோது, திடீரென்று என் முன்னால் தோன்றிய வாலிபர், என் முகத்துக்கு அருகே தன் முகத்தை கொண்டு வந்து, ‘ஒரு முத்தம் கொடு’ என்று கேட்டான்.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த வயதில் இந்த நிகழ்வுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தோன்றவில்லை. நல்லவேளையாக ரயில் அங்கிருந்து கிளம்பியதால் தப்பித்தோம். இப்போது மும்பை பாதுகாப்பான நகரம் என்று சொன்னாலும், நான் அங்கே படித்த காலங்களில் அப்படி இருந்தது இல்லை. அதிக பயத்துடன்தான் பஸ்சிலும், ரயிலிலும் பயணித்தோம். மும்பை இப்போது பாதுகாப்பான நகரம் என்று சொல்வேன். என்னிடம் தனியாக ஒரு கார் இருக்கிறது. டிரைவரும் இருக்கிறார்.

Related Stories: