ஹீரோ ஆகிறார் யூடியூபர்

சென்னை: ரஹ்மத் கிரியேஷன் சார்பில் தயாரித்து பிப்ரவரி மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ‘வாத்தியார்குப்பம்’. இந்த படத்தின் இயக்குனர் ரஹ்மத் சாகிப்புடன் மீண்டும் இணைந்து ரஹ்மத் கிரியேஷன் தயாரிக்க உள்ள அடுத்த திரைப்படம் ‘கடற்கரைப் பட்டினம்’ என்ற பெயரில் உருவாக உள்ளது. இத்திரைப்படத்தில் கதையின் ஒரு நாயகனாக பிரபல யூடியூபர் அபுபக்கர் சித்திக் நடிக்க உள்ளார். ஜாஸ் ஜேபி இசையமைக்க உள்ளார். நந்தா லெட்சுமண் மற்றும் ஏஆர். ராஜேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

நிக்க்ஷன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். நடன இயக்குனராக ஸ்டெர்வின் பணியாற்றுகின்றார். சண்டைப்பயிற்ச்சியாளர் மதுரை பணியாற்ற உள்ளார். மீனவர்களின் வாழ்வியல் பிரச்னைகளை மைய கருவாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. 2025ம் ஆண்டு தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளிவர உள்ளது.

Related Stories: