நந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணா பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். பாடல்கள் மற்றும் வசனத்தை கின்னாழ் ராஜ் எழுதியுள்ளார். சென்னையில் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரியங்கா உபேந்திரா பேசியதாவது: அஜித் சாரின் ‘ராஜா’, விக்ரம் சாருடன் ‘காதல் சடுகுடு’ உள்ளிட்ட 5 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளேன். என்னை இப்போதும் தமிழ் ரசிகர்கள் நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பேட்டியில், ‘நீங்கள் தயிர் சாதம்தானே’ என்று என்னிடம் கேட்டனர். அந்தளவுக்கு என் படத்தின் காட்சிகள் தமிழ் மக்களின் மனதில் நிலைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.