மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் இசிஆர் சாலையில் நட்சத்திர ஓட்டலின் உணவு கழிவுகளை வேனில் கொண்டு வந்து கொட்டும்போது, ஊராட்சி தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன், பொதுமக்கள் உணவு கழிவுகளுடன் வேன் மற்றும் டிரைவரை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இசிஆர், சாலையில் மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ரிசார்ட்டின் உணவு கழிவுகளை டன் கணக்கில் சேகரித்து, குப்பை கிடங்கில் கொட்டாமல், நட்சத்திர ரிசார்ட் நிர்வாகம், கோணிப் பைகளில் கட்டி ஒரு வேனில் கொண்டு வந்து மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலத்தில் இசிஆர் சாலையோரம் கொட்டப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களுடன் நேரில் சென்று நேற்று உணவு கழிவுகளை கொட்டிய வேன் மற்றும் அதனை ஓட்டி வந்த டிரைவரை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், எஸ்.ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறைபிடித்து வைத்திருந்த வேனை பறிமுதல் செய்து, டிரைவரை காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதில், உணவு கழிவுகளை எடுத்து வந்து சாலையோரம் கொட்டிய வேன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் சிவா (24) மீதும் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். …
The post ரிசார்ட் உணவு கழிவுகளை கொட்ட வந்த வேன் டிரைவர் சிறைபிடிப்பு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.