சித்தாமூர் அருகே 420 கிலோ குட்கா பறிமுதல் : இருவர் கைது

செய்யூர்: சித்தாமூர் அருகே இரும்பு குடோனில் பதுக்கி வைத்திருந்த 420 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் எல்லைக்குட்பட்ட தேவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (44). இவர் தனக்கு சொந்தமான இரும்பு குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற சித்தாமூர் போலீசார் நேற்று காலை செல்வகுமாரின் குடோனில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள மூட்டைகளில் ரூ.2 லட்சத்துக்கு 15 ஆயிரம் மதிப்பிலான 420 கிலோ குட்கா போதை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு செல்வகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கண்ணன் (52) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post சித்தாமூர் அருகே 420 கிலோ குட்கா பறிமுதல் : இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: