மறைமலைநகரில் பரபரப்பு கள்ளக்காதலிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: கள்ளக்காதலன் போலீசில் சரண்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், சாமியார் கேட், சாய்பாபா கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோதி என்கிற அஞ்சலாட்சி (36). கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது கணவர் முருகேசன் இறந்தார். பின்னர், ஜோதி தனது 17 வயது மகன் மற்றும் 14 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஜோதிக்கும், முருகேசனின் நண்பரான மறைமலைநகர் மெல்ரோசாபுரத்தை  கொத்தனார் வேலை செய்யும் முனியசாமி (40) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்நட்பு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, முனியசாமி தன் குடும்பத்தை விட்டுவிட்டு, ஜோதியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.  இதற்கிடையில்,நேற்று இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, முனியசாமி ‘‘உனக்காக நான் என் குடும்பத்தை விட்டுவிட்டு உன்னை நம்பி உன்னோடு வாழ்ந்து வருகிறேன். இனி நீயெல்லாம் உயிரோடு இருக்கவே கூடாது.’’ என கூறி, ஜோதியை அரிவாளால்  தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த ஜோதி அலறியவாறு ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அவருடைய மகன், மகள் ஓடி வந்தனர். அவர்களை கண்ட முனியசாமி இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் உங்களையும் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு தப்பியோடினார். உடனே, ஜோதியின் மகன் தனது பெரியப்பாவிற்கு நடந்த சம்பவத்தை போன் மூலம் கூறினான். இதை அடுத்து அங்கு வந்த அவர்  உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜோதியை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்று வருகிறார். இதற்கிடையில்,  தப்பியோடிய முனியசாமி மறைமலைநகர் காவல்நிவையத்தில் சரண் அடைந்தார். …

The post மறைமலைநகரில் பரபரப்பு கள்ளக்காதலிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: கள்ளக்காதலன் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Related Stories: