ரஜினி சொன்னதை மறக்க மாட்டேன்: மஞ்சு வாரியர்

சென்னை: மலையாள முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், தமிழில் ‘அசுரன்’, ‘துணிவு’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘வேட்டையன்’, ‘விடுதலை 2’, ‘மிஸ்டர் எக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: ரஜினி சாரை நேரில் பார்த்து இன்ஸ்பயராகி உள்ளேன். ‘வாழ்க்கையில் என்ன யோசித்தாலும், திட்டமிட்டாலும், எது நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும்’ என்று எனக்கு அவர் சொன்னதை மறக்க மாட்டேன். அவரை நேரில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

இப்போது அவரை நேரில் பார்த்துள்ளேன், அவருடன் நடித்துள்ளேன், நடனம் ஆடியிருக்கிறேன். இதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. ‘மனசிலாயோ’ பாடலுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்பாடலின் மூலம் 500 டான்சர்களின் குடும்பங்களுக்கு வேலை கிடைத்தது. நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடிப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். மக்களுக்குப் பிடித்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கான கதைகளை மட்டுமே கேட்கிறேன். தொடர்ந்து நான் தமிழ்ப் படங்களில் நடிப்பேன்.

The post ரஜினி சொன்னதை மறக்க மாட்டேன்: மஞ்சு வாரியர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: