பிரம்மோற்சவ விழாவையொட்டி புருஷோத்தமன் கோயிலில் யாழி வாகனத்தில் சாமி வீதியுலா

சீர்காழி: பிரம்மோற்சவ விழாவையொட்டி புருஷோத்தமன் கோயிலில் யாழி வாகனத்தில் சாமி வீதியுலா நடந்தது. சீர்காழி அருகே நாகூரில் 108 வைணவ தலங்களில் ஒன்றான புருஷோத்தமன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி தொடங்கி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சேஷ வாகனத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு திருமஞ்சனம் சேவை சாற்று முறை, பொது ஜன சேவை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: