மின் மோட்டார்கள் பழுதால் கூடலூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நந்தட்டி, எம் ஜி ஆர் நகர், துப்புகுட்டி பேட்டை, முத்தமிழ் நகர், முதல் மைல், இரண்டாம் மைல் பல்வேறு பகுதிகளிலும் கோழிப்பாலம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இரும்பு பாலம் பகுதியில் ஓடும் பாண்டியாற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் பம்ப் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தலா 40 ஹெச்பி ஆற்றல் உள்ள 2 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு மோட்டார்களும் மின்சார கோளாறு காரணமாக பழுதடைந்துள்ளன. இதன் காரணமாக  இப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் மோட்டார்கள் பழுதுநீக்கி மீண்டும் குடிநீர் வழங்க சுமார் ஒரு வாரம் ஆகலாம் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த மின் மோட்டர்களை நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரன், தலைவர் பரிமளா, துணைத்தலைவர் சிவராஜ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பர்வையிட்டு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்….

The post மின் மோட்டார்கள் பழுதால் கூடலூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: