ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் பொங்கலுக்கு வெளிவருகிறது. இந்த படத்தின் கதை லண்டனில் நடக்கிறது. முழு படப்பிடிப்பும் லண்டனில் நடந்தது. லண்டன் சிறைச்சாலை ஷெட் அமைத்து அந்த பகுதி படப்பிடிப்பு மட்டும் சென்னையில் நடந்தது. ரஜினியுடன் ‘2.ஓ’ படத்தில் நடித்த எமி ஜாக்சன் 5 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் லண்டன் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். எமி ஜாக்சனுடன் நிமிஷா சஜயன், அபி ஹசன் மற்றும் பல ஆங்கில நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
The post பொங்கல் போட்டியில் எமி ஜாக்சன் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.