கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு ஏப்.16ல் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சித்ராபவுர்ணமியை ஒட்டி மதுரையில் 12 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி, உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாரம் முழுக்கவே திருவிழா முக்கிய நிகழ்ச்சிகளால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மதுரை ஆழ்வார்புரம் ஆற்றுப் பகுதியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், வங்கிகள் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்படும் எனவும் கூறியுள்ளார். 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதித்து திருவிழா நடத்துவதால் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு வழக்கத்தை விடவும் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. …

The post கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு ஏப்.16ல் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: