ஊத்தங்கரை அருகே நாயை அடித்துக்கொன்ற வாலிபர்: வீடியோ வைரல்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமம் வேலன் நகர் பகுதியை சேர்ந்தவர்  விவசாயி சிவக்குமார். இவரின் னைவி புவனேஸ்வரி (40). நீப்பத்துறை காப்புக்காடு அருகே புவனேஸ்வரி மற்றும் அவரின் தாய் மகாலட்சுமி ஆகியோர் கொட்டகை அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டு கொண்டிருந்தனர்.இதேபகுதியை சேர்ந்த காசிநாதன் என்பவருக்கும் சிவக்குமாரின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விராதம் உள்ளது. இந்நிலையில் கொட்டகை அமைத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காசிநாதன்(45) புவனேஸ்வரி மற்றும் மகாலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த புவனேஸ்வரியின் வளர்ப்பு நாயை ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சரமாரியாக அடித்தார். இதில் பலத்த காயமடைந்து சிறிது நேரத்தில் நாய் உயிரிழந்தது. இதுகுறித்து புவனேஸ்வரி சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் காசிநாதன் நாயை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. …

The post ஊத்தங்கரை அருகே நாயை அடித்துக்கொன்ற வாலிபர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: