ஏறுனா ரயிலு, இறங்குனா ஜெயிலு, போட்டா ெபயிலு அரசு பள்ளியில் கத்தியை காட்டி ஆசிரியரை மிரட்டும் மாணவர்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

தேவதானப்பட்டி:  தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் உள்ள வைகை அணைச் சாலையில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு  தேவதானப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 900 பேர் படித்து வருகின்றனர். கடந்த வாரம் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், மது போதையில் வந்து, ஆசிரியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். அப்போது, ‘ஏறுனா ரயிலு, இறங்குனா ஜெயிலு, போட்டா ெபயிலு. என்ன யாரும் ஒன்னும் செய்ய முடியாது’ என பேசியுள்ளார். இதை வீடியோவாக எடுத்த சக ஆசிரியர்கள், தங்களது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவரை பள்ளியில் இருந்து நீக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வீடியோவை காண்பித்து கோரினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது….

The post ஏறுனா ரயிலு, இறங்குனா ஜெயிலு, போட்டா ெபயிலு அரசு பள்ளியில் கத்தியை காட்டி ஆசிரியரை மிரட்டும் மாணவர்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: