வெஸ்ட்இண்டீசை ஜோ ரூட் அவமரியாதை செய்து விட்டார்: மாஜி வீரர் பாய்ச்சல்

ஆன்டிகுவா: வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் இடையே ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனிடையே டெஸ்டின் 5வது நாளில் டிராவை ஒப்புக்கொள்ள கடைசி ஓவர் வரை (5 பந்து மீதமிருந்தது) எடுத்துக்கொண்டு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அவமரியாதை செய்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட் குற்றம் சாட்டியுள்ளார். பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச்சில் 2 செட் பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்த நிலையில் நானாக இருந்தால் கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பே டிரா முடிவை எடுத்திருப்பேன். கடைசி ஓவர் வரை இங்கிலாந்து இன்னும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று நினைத்தது மரியாதைக் குறைவு. ஆஷஸ் டெஸ்ட் என்றால் இங்கிலாந்து அதைச் செய்திருக்குமா? இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக அதைச் செய்திருப்பார்களா?. இங்கிலாந்து நினைப்பதை விட நாங்கள் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க இன்னும் இரண்டு டெஸ்ட் உள்ளன, என தெரிவித்துளளார்….

The post வெஸ்ட்இண்டீசை ஜோ ரூட் அவமரியாதை செய்து விட்டார்: மாஜி வீரர் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: