பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வெற்றி

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 13 வார்டுகளில் அதிமுகவினர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், அதிமுக சார்பில் பேரூர் செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் 16வது வார்டில் வெற்றி பெற்றார். அவரது மனைவி தவமணி 13வது வார்டில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். அவரது, அண்ணன் ஜீவானந்தம் 10வது வார்டிலும், தம்பி மோகனகுமார் 4வது வார்டிலும், அவரது மனைவி திலகவதி 18வது வார்டு என ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மேலும், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பேரூர் செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    …

The post பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: