மீஞ்சூர் அருகே ரயில் சேவை பாதிப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் 2 பெட்டிகளுக்கு இடையே இருக்கும் இணைப்பு கொக்கி உடைந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் அருகே சரக்கு ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்ற ரயிலில் இன்ஜினுடன் ஒரு பெட்டி மட்டும் கழன்றது. கழன்ற பெட்டிகளை இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மீஞ்சூர் அருகே ரயில் சேவை பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: