மாணவர்களுக்கு பாராட்டு விழா

மல்லமுத்திரம், ஆக.2: வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2024-2025ம் கல்வியாண்டில், உயர்கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி கவுரவிக்கும் விழா நேற்று முன்தினம் பள்ளி வாளகத்தில் நடந்தது.
திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் தலைமை வகித்து பாராட்டி பேசினார். முன்னதாக தலைமை ஆசிரியர் சாந்தாமணி வரவேற்று பேசினார்.சாதனை படைத்த மாணவ, மாணவிகளான தேவா, இனிகா, தருண், ஸஞ்சிதன் ஆகியோரை பாராட்டி பரிசும், சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், எஸ்எம்சி உறுப்பினர்கள், முன்னாள் மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: