நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கைவிடக்கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் வாக்குரிமையை பறிப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில், காங்., திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர். ராகுல்காந்தி தலைமையிலான போராட்டத்தில் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட தமிழக எம்.பி.க்களும், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: