விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. 15 ஆய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டு, இன்று முதல் பட்டாசு ஆலைகளை ஆய்வு மேற்கொள்ளவுள்ள நிலையில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. ஆய்வுகளில் விதிமீறல் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தொடர்ந்து 10 நாட்களுக்குள் அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

The post விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: