காளிகாம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு கட்டவேண்டிய தொகையை கல்வி குழுவில் இருக்கக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை இலவசமாக வழங்கி கொண்டிருக்கிறது. ஏகாம்பரநாதர் கோயிலில் செயல்படுகிற பள்ளி இந்த ஆட்சிக்கு பிறகுதான் பாதுகாக்கப்பட்டது. அங்குள்ள மாணவர்களுக்கு 146 மிதிவண்டி கிடைக்கிறது. இவர் என்ன அரசியல் ஞானியா, எடப்பாடி வாயை கொடுத்து மாட்டிக்கொண்டிருக்கிறார். கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொண்டிருக்கிறார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அவரது கருத்தால் மாணவர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். 2026க்கு பிறகு எடப்பாடி பழனிசாமி என்ற பெயர் நிச்சயமாக மறையும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மேயர் பிரியா, ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ, சிஎம்டிஏ அதிகாரிகள், மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் கட்டா ரவி தேஜா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
The post எடப்பாடி பழனிசாமி என்பதை விட பல்டி பழனிசாமி என அழைக்கலாம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு கிண்டல் appeared first on Dinakaran.
