இதனால் முதல் பாதியின் முடிவில் ஒடிசா 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 2வது பாதியில் ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பெனால்டிக் கார்னர் வாய்ப்பில் சவுமியா கோலாக மாற்றி தமிழ்நாட்டின் கோல் கணக்கை தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு கோல் அடிக்க முயற்சித்தும் முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் ஒடிசா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடந்த 2வது அரையிறுதியில் அரியானா-பஞ்சாப் அணிகள் களம் கண்டன. அதில் பஞ்சாப் 3-2 என்ற கோல் கணக்கில் அரியானாவை அடக்கியது. இன்று பிற்பகல் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஒடிசா-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. முன்னதாக காலையில் நடக்கும் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு-அரியான அணிகள் களம் காண உள்ளன.
The post பெண்கள் மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் தமிழ்நாடு ஏமாற்றம்: பைனலில் ஒடிஷா-பஞ்சாப் இன்று மோதல appeared first on Dinakaran.
