சென்னை : “பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியது பிரசாத்தான்” என்று நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதானதற்கு முன்புதான் அவரிடம் 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன்.அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம் | வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன்.பிரசாத்தை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் என்னை வைத்து படம் தயாரித்துள்ளார்.எனக்குத் தர வேண்டிய ரூ.10 லட்சத்தை கேட்டபோது, கொக்கைன் கொடுத்து பழக வைத்தவர் பிரசாத்தான்”இவ்வாறு தெரிவித்தார்.
The post “பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியது பிரசாத்தான்” : நடிகர் ஸ்ரீகாந்த் appeared first on Dinakaran.