இந்நிலையில், போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;
கீழடி அகழாய்வு அறிக்கை விசயத்தில்
அறிவியல் பூர்வமான ஆதராங்கள் வேண்டும் என்று இப்போது கேட்கும் நீங்கள் , ஏன் இதற்கு முன்பு நீதிமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இதைச் சொல்லவில்லை ?
போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது ?
இது வெறும் அறிக்கை வெளியிடும் பிரச்சனை அல்ல ; உண்மைக்கும் கயமைக்கும் இடையில் நடக்கும் போராட்டம் . இதில் உண்மையே வெல்லும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post கீழடி அகழாய்வு விவகாரம்.. உண்மைக்கும் கயமைக்கும் நடக்கும் போராட்டம்: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!! appeared first on Dinakaran.
