விருதுநகர், ஜூன் 16: விபத்து ஏற்படுவதால் மேம்பாலசுவர்களில் ஒட்டப்படும் பிளக்ஸ் பேனர் மற்றும் விளம்பரங்களை தடை செய்துள்ளதாக காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை அரசு சுவர்கள் மற்றும் மேம்பாலங்களில் போஸ்டர், பிளக்ஸ் பேனர், சுவர் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏற்படும் கவன ஈர்ப்பு காரணமாக பல விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் ஏராளமானோர் காயமடைவதுடன் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறையினர் பாலச்சுவர்களில் அறிவிப்பை ஒட்டியுள்ளனர். அதில், தேசிய நெடுஞ்சாலை அரசு சுவர்கள் மற்றும் மேம்பாலங்களில் பிளக்ஸ் பேனர், சுவர் விளம்பரம், நோட்டீஸ், சாதி, மதம், அரசியல் மற்றும் தனிநபர் சம்பந்தமான விளம்பரம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் விளம்பரங்களை பார்த்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. மீறி சுவர் விளம்பரம் செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மேம்பால சுவர்களில் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.
