இந்த புதுமையான திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறையின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள பொறியியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியை இந்துமதி எம்.நம்பி கூறியதாவது: இந்த புதுமையான அணுகுமுறையானது சுத்திகரிப்பு நிலையத்தில் தேவைப்படும் ஆர்ஓ அலகுகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இறுதியில் மொத்த சுத்திகரிப்பு செலவையும் 25 சதவீத அளவுக்கு குறைப்பதுடன், ஆர்ஓ உள்கட்டமைப்பு செலவையும் 75 சதவீதம் குறைக்கிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் துணைப் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய குளோரினைப் பயன்படுத்தாமலேயே வண்ணம் மற்றும் கரிம மாசுபடுத்திகளை திறம்பட நீக்க முடிகிறது.
தூய்மையான நீர் வளங்களை எங்களது சுத்திகரிப்பு அமைப்பு ஊக்குவிப்பதுடன் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளையும் ஆதரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளான 6,12,13,14,15,17 ஆகியவற்றுடன் இணைந்து இருப்பதுடன் ஜவுளித் துறையில் சுற்றுச்சூழல் பொறுப்பையும் மேம்படுத்துகிறது. ஆர்ஓ அமைப்புகள் இல்லாத சிறிய சாயமிடும் தொழில்களால் மின்வேதியியல் ஓசோன் ஆக்சிஜனேற்ற முறையைப் பின்பற்றுவதைப் பரப்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தியாவில், ஜவுளித் தொழில் நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தையும், தொழில்துறை உற்பத்தியில் 7 சதவீதத்தையும், ஏற்றுமதி வருவாயில் 12 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும் உலகளாவிய நீர் மாசுபாட்டிற்கு இத்தொழில் 20 சதவீதம் பொறுப்பாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜவுளி ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பு பூஜ்ஜிய திரவ வெளியேற்றத்திற்கான புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி சாதனை appeared first on Dinakaran.
