அரியலூர், மே 16: அரியலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) வருகிற 20ம் தேதி முதல் தொடங்குகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பொ.ரத்தினசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்;
அரியலூர் வட்டத்தில் ஜமாபந்தி மாவட்ட கலெக்டர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இவற்றில் அரியலூர் உள்வட்டத்தில் வருகிற 20ம் தேதியும், நாகமங்கலம் உள்வட்டத்தில் 21ம் தேதியும், கீழப்பழுவூர் உள்வட்டத்தில் 22ம் தேதியும், திருமானூர் உள்வட்டத்தில் 23ம் தேதியும், ஏலாக்குறிச்சி உள்வட்டத்தில் 27ம் தேதியும் நடைபெறும்.
இதே போல், உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட தா.பழூர் உள்வட்டத்தில் 20ம் தேதியும், சுத்தமல்லி உள்வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் 21ம் தேதியும், குண்டவெளி உள்வட்டத்தில் 22ம் தேதியும், உடையார்பாளையம் உள்வட்டத்தில் 23ம் தேதியும், ஜெயங்கொண்டம் உள்வட்டத்தில் 27ம் தேதியும் வருவாய் தீர்வாயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
செந்துறை வட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறும். இவற்றில் செந்துறை உள்வட்டத்தில் வருகிற 20ம் தேதியும், பொன்பரப்பி உள்வட்டத்தில் 21ம் தேதியும், ஆர்.எஸ்.மாத்தூர் உள்வட்டத்தில் 22ம் தேதியும் நடைபெறும். ஆண்டிமடம் வட்டத்தில் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறும். இவற்றில், ஆண்டிமடம் உள்வட்டத்தில் 20ம் தேதியும், குவாகம் உள்வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் வருகிற 21ம் தேதியும் வருவாய் தீர்வாயம் நடைபெறும்.
எனவே, பொதுமக்கள் இந்த ஜமாபந்திகளில் பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில அளவை, முதியோர் ஓய்வுதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை, பிற துறைகள் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது
The post அரியலூர் மாவட்டத்தில் வருகிற 20ம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது appeared first on Dinakaran.
