சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் புளியங்குடி கண்ணா பள்ளி 100% தேர்ச்சி

புளியங்குடி,மே 16: புளியங்குடி கண்ணா சர்வதேச பள்ளியில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மாணவி சுகாசினி 10ம் வகுப்பு பொதுதேர்வில் கணிதம், தமிழில் 100/100 மதிப்பெண்களும், ஆங்கிலம் 98, அறிவியல் 99, வரலாறு 97 என மொத்தம் 494/500 மதிப்பெண்கள் பெற்று நெல்லை, தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சமீம் பாத்திமா 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், அனுஷா நந்தினி 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், அபிராமி 486 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும் பெற்றனர். தமிழ், கணிதத்தில் 7 மாணவர்கள் 100/100ம், அறிவியல், வரலாறு 4 மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் சம்ஜித் கிருஷ்ணா 95 சதவீதமும், மாணவிகள் பேரன்கனி 94 சதவீதமும், அஸ்வினி 94 சதவீதமும் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி சேர்மன் பிரகாஷ், கண்ணா பள்ளி தாளாளர் லக்ஷ்மி பிரியா, பள்ளி முதல்வர் பிரேமா சரவணன் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்

The post சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் புளியங்குடி கண்ணா பள்ளி 100% தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: