திருமங்கலம், மே 14: திருமங்கலம் அருகே வேலை பார்த்த வீட்டின் கதவை உடைத்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்த ஜேசிபி டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராமர்(35). கடந்த 3ம் தேதி இவர் குடும்பத்துடன் சென்னைக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றார். கடந்த 6ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஊருக்கு திரும்பிய ராமர் வீட்டின் மாடி கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த தங்கநெக்லஸ், செயின், 2 ஜோடி வளையல், மோதிரம், தோடு உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளும், பீரோவில் இருந்த 1 லட்சம் பணமும் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜேசிபி டிரைவராக இருந்த கண்ணன்(35) மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில் ராமர் வீட்டில் நகை, பணத்தை அவர் ஊரில் இல்லாத நேரத்தில் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் பணம், நகையை மீட்டு
கண்ணனை ரிமாண்ட் செய்தனர்.
The post வேலை பார்த்த வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்தவர் கைது appeared first on Dinakaran.
