சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, அனைத்து வட்டங்களிலும் மே 23 முதல் நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 1434ம் பசலிக்கான வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, அனைத்து வட்டங்களிலும் வருகின்ற மே 23, மே 27, மே 28, மே 29, மே 30 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.
மேற்கண்ட அனைத்து நாட்களிலும் காளையார்கோவில் வட்டத்தில் கலெக்டர் தலைமையிலும், இளையான்குடி வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் மற்ற வட்டங்களில் அரசு உயர் அலுவலர்கள் தலைமையிலும் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.எனவே, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில், வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிவகங்கை மாவட்டத்தில் மே 23 முதல் வருவாய் தீர்வாயம் appeared first on Dinakaran.
