கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘நாங்கள் அரசாங்கத்தை அமைப்பதற்காக மட்டுமல்ல தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவும் தான் அரசியல் செய்கிறோம். இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையாகும். அதனால் இந்திய ஆயுதப்படைகளால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் தொழில்நுட்ப விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆயுதப்படை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததற்கு இதுவே காரணமாகும். ஏனெனில் அவர்கள் ஆபரேஷன் நடவடிக்கையில் தீவிரமாக இருக்கிறார்கள். இந்திய ராணுவத்தின் சிந்தூர் நடவடிக்கையில் சுமார் 100 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா பதிலடி கொடுக்கும்’’ என்றார்.
ஆபரேஷன் சிந்தூரின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆயுத படையை பாராட்டினார்கள். மேலும் அனைத்து தலைவர்களும் அரசிற்கும், ஆயுத படைகளுக்கும் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூட்டத்தில் தெரிவித்தனர். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நெருக்கடியான நேரத்தில் நாங்கள் அரசுடன் இருக்கிறோம் என்றார். இதேபோல் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆபரேஷன் சிந்தூரை நடத்தியதற்காக ஆயுதபடைகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
The post ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் appeared first on Dinakaran.
