திண்டுக்கல்லில் கல்லூரி கனவு ஆலோசனைக் கூட்டம்

 

திண்டுக்கல், மே 7: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள், உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்யும் வகையில், அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம், திண்டுக்கல் எம்எஸ்பி சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சரவணன் தலைமை வகித்து தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பள்ளித் தலைமை ஆசிரியர், அனைத்து உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் இணைந்து தற்போது பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் திறனுக்கு ஏற்ப பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்கல்விகளை பயில்வது குறித்து விவாதிக்க வேண்டும். மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரிக் கனவு முகாம், பாலிடெக்னிக் சேர்க்கை முகாம் மற்றும் உயர்வுக்குப் படி முகாம்களில் மாணவர்களை கலந்து கொள்ளச் செய்து உயர்கல்வி சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும். பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.

The post திண்டுக்கல்லில் கல்லூரி கனவு ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: