சிதம்பரம்: மோதலை ஏற்படுத்தும் விதமாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறிய மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை தேவை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பான மதுரை ஆதீனதின் குற்றச்சாட்டை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. மதுரை ஆதீனம் போன்ற மடாதிபதிகள் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்; மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதங்களுக்கு இடையே பகையை உண்டாக்கும் விதமாக உள்ளது என்றும் கூறினார்.
The post மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை தேவை: திருமாவளவன் appeared first on Dinakaran.
