இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஏப். 26: தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் . செங்கோடன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜீவானந்தம், நகரச் செயலர் நாடிமுத்து, துணைச் செயலர் பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆளுநரைக் கண்டித்தும் பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

The post இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: