சிவகாசி, ஏப்.25: சிவகாசி அருகே நண்பர்களை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே மீனம்பட்டி அம்பேத்கார்நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவரும் இவரது நண்பர் அசோக்குமார் (33) என்பவரும் மீனம்பட்டி திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார்(28), தினேஷ்குமார்(33) ஞானபிரகாஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக மணிகண்டன், அசோக்குமார் ஆகியோரை வழிமறித்து கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த 2 பேருக்கும் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து தினேஷ்குமார், சம்பத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஞானபிரகாசை தேடி வருகிறார்கள்.
The post நண்பர்களுக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.
