மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 3வது நாளாக நேற்றும் நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக நீடித்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,872 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 2,369 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 107.67 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 107.73 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 75.22 டிஎம்சியாக உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,369 கனஅடி appeared first on Dinakaran.