வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் நிலவி வருவதால் விமான சேவை பாதிப்பு.!

சென்னை: வட மாநிலங்களில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலகிறது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தாமதமாக இயக்கம், திடீர் ரத்து போன்ற காரணங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி உள்பட வடமாநிலங்களில் நேற்றும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால், டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கவுகாத்தி, வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 12 ஏர் இந்தியா விமானங்கள், இண்டிகோ புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: