சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

தேனி, ஏப். 23: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தேனி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜகோபால் என்ற சிட்டி(24). இவர் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரியில், எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார், உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரக்ஷிதா ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், ராஜகோபாலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: