ராஜாபுதுக்குடியில் பயணியர் நிழற்குடை திறப்பு

கோவில்பட்டி,ஏப்.22: கோவில்பட்டி அருகே ராஜாபுதுக்குடியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியில் இருந்து புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. ராஜாபுதுக்குடி ஊர் நாட்டாண்மைகள் காமாட்சி, முண்டசாமி, நல்ல மாரிமுத்து தலைமை வகித்தனர். பஞ்சாயத்து செயலாளர் சண்முக குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஓலைக்குளம் திமுக இளைஞரணி மணிகண்டன், திருமங்கலம்குறிச்சி பரமசிவம், தெற்கு இலந்தைகுளம் கிளை செயலாளர் மற்றும் நாட்டாமை ஆறுமுகம், ராஜாபுதுக்குடி பால்ராஜ், தங்கவேல், மகளிரணி வள்ளியம்மாள், செல்வி, மாரியம்மாள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராஜாபுதுக்குடி திமுக கிளை செயலாளர்கள் சதீஷ்குமார், புனித ராஜ், மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post ராஜாபுதுக்குடியில் பயணியர் நிழற்குடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: