வாகனங்களுக்கு போதிய பார்க்கிங் வசதிகளும் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. போதிய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட தேவையான முன்னேற்பாடுகள், சுகாதாரமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘சித்திரை திருவிழா ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த மனுவை தாக்கல் செய்து உள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.
The post மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு தமிழக அரசு ஏற்பாடுகள் சிறப்பு: ஐகோர்ட் கிளை பாராட்டு; பாதுகாப்பு வசதிகள் கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.
