குவாரி பணிகளுக்கு இணையவழி வாயிலாக நடைசீட்டு

மயிலாடுதுறை, ஏப். 18: மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறு வகை கனிம குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி பணிகள் நடைபெற்று வருகின்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் குவாரியிலிருந்து எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடைச்சீட்டுகளை இணையவழி வாயிலாக வழங்கும் நடைமுறை வரும் 28ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுகனிம குத்தகை உரிமம் வழங்கும் நடைமுறையானது வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் முழுவதுமாக இணைய வழியில் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே இணையதளத்தின் வாயிலாக குவாரி குத்தகைதாரர்கள் விண்ணப்பித்து நடைச்சீட்டு பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், புதிதாக குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மேற்கண்ட இணையதளம் மூலமாக மட்டுமே பெறப்படும் என மாவட்ட கலெக்டர் காந்த் தெரிவித்துள்ளார்.

The post குவாரி பணிகளுக்கு இணையவழி வாயிலாக நடைசீட்டு appeared first on Dinakaran.

Related Stories: