மதுரை: மதுரையில் தொழிலதிபர் மகன் சுந்தரை கடத்திய வழக்கில் 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். மரியராஜ், முத்துகுமார், விக்னேஷ், அருண், அருண்குமார், முத்துமணி ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். கடத்தப்பட்ட சுந்தர் மதுரையில் உள்ள பிரபல மில் நிறுவனமான மீனாட்சி மில் உரிமையாளரின் மகன் ஆவார். திண்டுக்கல்லில் 15 ஏக்கர் சொத்து விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சொத்து விவகாரம் தொடர்பான பிரச்சனையில் சுந்தர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.
The post தொழிலதிபர் மகன் கடத்தல்: 6 பேர் கைது appeared first on Dinakaran.