செய்யாறு, ஏப். 17: ஆக்சிலேட்டரை முறுக்கியதால் தண்ணீர் தொட்டி மீது மொபட் மோதி தந்தை கண்ணெதிரே 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன். இவர் கடந்த 13ம்தேதி தனது மகன் துர்வேஸ்வரன்(3) என்பவரை அழைத்துக்கொண்டு ஆக்கூர் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடைக்கு சென்றார். அங்கு மொபட்டை ஆப் செய்யாமல் நிறுத்திவிட்டு, மகனையும் மொபட்டிலேயே இருக்கும்படி கூறிவிட்டு பழங்களை வாங்க சென்றார்.
அப்போது துர்வேஸ்வரன், மொபட்டில் இருந்து கீழே இறங்க முயன்றபோது ஆக்சிலேட்டரை முறுக்கியதாக தெரிகிறது. இதில் மொபட் எதிரே இருந்த தண்ணீர் தொட்டி மீது மோதியது. இதில் துர்வேஸ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகன் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி துர்வேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின்பேரில் தூசி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post தண்ணீர் ெதாட்டி மீது மொபட் மோதி 3 வயது குழந்தை பலி தந்தை கண்ணெதிரே சோகம் ஆக்சிலேட்டரை முறுக்கியதால் appeared first on Dinakaran.