ராஞ்சி: ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக சிபு சோரன் இருந்து வந்தார். அவரது மகன் ஹேமந்த் சோரன் 2015ம் ஆண்டு முதல் கட்சியின் நிர்வாக தலைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 13வது மாநாட்டில் கட்சியின் மத்திய தலைவராக ஹேமந்த் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தந்தை சிபு சோரன் கட்சியின் நிறுவன புரவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
The post ஜேஎம்எம் மத்திய தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு appeared first on Dinakaran.