தனி நபர் விளையாட்டைவிட பெரியவரா?: நடிகர் விஷ்ணுவிஷால் சாடல்

சென்னை: சிஎஸ்கே அணியின் ஆட்டம் நடப்பு ஐபிஎல் தொடரில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தீவிர ரசிகர்களே கழுவி, கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் போராட்ட குணமே இல்லாமல் சிஎஸ்கே மோசமாக ஆடி தோற்றது. இதற்கிடையில் போட்டி நடந்துகொண்டிருந்தபோதே நடிகர் விஷ்ணுவிஷால் எனது எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், “நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது அராஜகம். ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்க வேண்டும்.

எந்த ஒரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவதில்லையா? இது இப்போது ஒரு சர்க்கஸை பார்ப்பது போல உள்ளது. எந்தவொரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல” என்று தெரிவித்துள்ளார். சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் 6வது வரிசையில் பேட்டிங் இறங்கும் கேப்டன் டோனி 9வதாக இறங்கியது விமர்சனத்துக்குள்ளானது. தோற்றுக் கொண்டிருக்கும் அணியை ஒரு கேப்டனாக அவர் முன்கூட்டியே இறங்கி காப்பாற்ற முயற்சி செய்திருக்க வேண்டும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே நடிகர் விஷ்ணு விஷாலும் டோனியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The post தனி நபர் விளையாட்டைவிட பெரியவரா?: நடிகர் விஷ்ணுவிஷால் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: