பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை: போலீசாருக்கு மாவட்ட எஸ்பி உத்தரவு

 

ராஜபாளையம், ஏப். 11: ராஜபாளையம் பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் திருவிழா காலம் என்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது வெளியில் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அரசினால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் நடமாட்டம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, 24 மணி நேரமும் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் டிஎஸ்பி ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அசோக் பாபு, ஆனந்தி, மரிய பாக்கியம், உள்ளிட்ட காவல்துறையினர், தீவிர நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 20 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை: போலீசாருக்கு மாவட்ட எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: