சென்னை: விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். விசைத்தறி தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என லட்சணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.