தேங்கிய மழைநீரில் வழுக்கி விழுந்த பெண் பலி

 

தேனி, ஏப்.10: தேனி அருகே தாடிச்சேரி, தெற்கு தெருவை சேர்ந்தவர் தனிக்கொடி மகன் சுருளிமுருகன். இவரது அக்காள் போதுமணி. இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், தனது தம்பி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 5ம் தேதி மாலை தாடிச்சேரியில் மழை பெய்தது. அப்போது போதுமணி வீட்டிற்கு வெளியே வந்த நிலையில் மழைநீரில் வழுக்கி விழுந்தார்.

இதில் முதுகு பகுதியில் காயமடைந்தது. இதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி போதுமணி உயிரிழந்தார். இது குறித்து சுருளிமுருகன் அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேங்கிய மழைநீரில் வழுக்கி விழுந்த பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: